ஒரு கணவன்…2 காதலர்கள் : கொலையில் முடிந்த சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்!!

840

சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் கடந்த 16 ஆம் திகதி குடிபோதையில் தனது காரில் இறந்துகிடந்தார். குடித்துவிட்டு காருக்குள் மூச்சுதிணறி இறந்துவிட்டதாக கருதி இவரது உடலை மனைவி நளினி அடக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில், ராஜேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் பத்மாவதி மற்றும் குமரேஷன் ஆகிய இருவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பத்மாவதிக்கும் இறந்துபோன ராஜேஷ்க்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. பின்னர் பத்மாவதி மதுரவாயிலை சேர்ந்த குமரேசன் என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். குமரேசனுடன் ஏற்பட்ட புது தொடர்பால் ராஜேஷை கைவிட்டுள்ளார் பத்மாவதி.

இதனால், கோபம் கொண்ட ராஜேஷ், பத்மாவதியுடன் அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார். இதனால் கோபம் கொண்ட பத்மாவதி, தனது இரண்டாவது கள்ளக்காதலன் குமரேசனை வைத்து முதல் கள்ளக்காதலன் ராஜேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன்படி, ராஜேஷை மது அருந்த அழைத்து மதுவில் விஷம் கலந்துகொடுத்துள்ளனர். பின்னர், அவரை அடித்து காருக்குள் படுக்கவைத்துவிட்டு சென்றுள்ளனர்.

போதையில் தான் ராஜேஷ் படுத்திருப்பதாக நினைத்து அவரது மனைவி நளினி இதனை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து காலையில் பார்க்கும்போதுதான் ராஜேஷ் இறந்துகிடந்துள்ளார்.

இந்த கொலை வழக்கில், நளினி புகார் அளிக்கவில்லை. இருப்பினும் பொலிசார் முன்வந்து குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இதில் முக்கிய காட்சியாக, குமரேஷன் மதுவில் விஷத்தை கலந்து ராஜேஷ்க்கு கொடுத்த காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து இதனை உறுதிப்படுத்திக்கொள்ள இறந்துபோன ராஜேஷின் உடலை தோண்டியெடுத்து, பிரேத பரிசோதனை நடத்த பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.