பள்ளி வகுப்பறையில் நடந்த மோதல் : சக மாணவனை தாக்கிய மாணவன் மர்மமாக பலி : வெளியான வீடியோ காட்சி!!

440

தமிழகத்தில் சக மாணவனை தாக்கிய மற்றொரு மாணவன் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளியில் மாணவர்கள் சண்டை போட்டுக் கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடையார் என்ற மாணவன் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இதையடுத்து இந்த மாணவன் கடந்த 16-ஆம் திகதி பள்ளிக்கு அருகே உள்ள கிணற்றில் மர்மான முறையில் இறந்துகிடந்தான்.
இதனால் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது உடையார் மற்றொரு மாணவனைத் சற்று கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அந்த மாணவன் வகுப்பறையிலே மயங்கி விழுந்துள்ளான்.

இதைக் கண்ட சக மாணவர்கள் உடனடியாக அந்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் உடையாரை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால், அவன் இறந்துவிட்டால் தன்னை பொலிசார் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்திலே உடையார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் உடையாரின் பெற்றோரோ தங்கள் மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கயத்தாறு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.