கருவை கலைத்த காதலன் : கலைக்கப்பட்ட 5 மாத கருவை பையில் போட்டு எடுத்து காவல் நிலையம் சென்ற காதலி!!

471

உத்திரபிரதேசத்தில் காதலன் ஏமாற்றியதால் கர்ப்பமான காதலி அழிக்கப்பட்ட கருவை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார்.

குறித்த பெண், அந்நபரை காதலித்துள்ளார். இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் இப்பெண்ணை அவரது காதலர் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் கர்ப்பமான பெண், தனது காதலனிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலன், கருவை கலைக்குமாறு வற்புறுத்தி கருவை கலைத்துள்ளார்.

இதனால் அப்பெண் கலைக்கப்பட்ட 5 மாத கருவை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்று, தன்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

இவரின் புகார் ஏற்றுக்கொண்ட பொலிஸார் குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.