7 வயது சிறுமியை சீரழித்தவனுக்கு தூக்குத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

549

ராஜஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 19 வயது காமுகனுக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் லட்சுமண்கர் பகுதியில் வசித்து தம்பதியினர், கடந்த மே 9ம் தேதியன்று தங்களது 7 வயது குழந்தையை உறவினர்கள் வீட்டில் விட்டு சென்றனர். திரும்பி வந்து பார்த்தபொழுது சிறுமி வீட்டில் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர். பக்கத்து வீட்டு 19 வயது இளைஞர் தான் சிறுமியை அழைத்து சென்றார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியை பல பகுதிகளில் தேடிக்கொண்டிருக்கும் பொழுது, வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் குழந்தை கதறி அழும் சத்தம் கேட்டுள்ளது.இதனையடுத்து அருகில் சென்று சிறுமியை பார்க்கும்பொழுது, உடல் முழுவதும் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இதனையடுத்து சம்மந்தப்பட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றவாளியான 19 வயது இளைஞருக்கு தூக்குத்தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பளிக்கப்பட்டது.

முன்னதாக 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிப்பதற்கான சிறப்பு சட்டத்தை, கடந்த மார்ச் மாதம் கொண்டு வந்த பிறகு மரண தண்டனை விதிக்கப்படும் முதல் நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.