உன் அம்மாவை அப்படி தான் பார்ப்பியா? கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்!!

435

சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமாக பேசியுள்ளார்.

சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி, முதியவர்கள் உட்பட 17 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து பேசிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், 11 வயது சிறுமியை சீரழிக்க எப்படி மனம் வந்தது. அவள் முகத்தை பார்த்த போது தங்களின் மகள், பேத்தி ஞாபகம் வரவில்லையா? நாட்டில் பெண்களை தவறாக பார்க்கும் கண்ணோட்டம் அதிகரித்துவிட்டது.

ஆண்கள் திருமணம் செய்து கொள்வது பெண்கள் அவர்களுக்கு சமைத்து கொடுத்து, துணி துவைக்க மற்றும் இலவச உறவுக்கு தான் என காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் பெண்களை தவறாக பார்ப்பவர்கள் அம்மாவையும் தவறாக தான் பார்ப்பார்களா என கொந்தளிப்புடன் கேள்வியெழுப்பியுள்ளார்.