நடிகை ஸ்ரீரெட்டி இடம் கொடுக்கப்போய்தான் இது நடந்துள்ளது : இயக்குநர் பாரதிராஜா குற்றச்சாட்டு!!

462

ஆந்திர சினிமா வட்டாரத்தை தாக்கிய நடிகை ஸ்ரீரெட்டியின் கோபம் தற்சமயம் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பி இருக்கிறது.

அடுக்கடுக்காக நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். ஆனால் அவரது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பலரும் மெளனமாக இருக்கிறார்கள்.

வாய்ப்பு தருகிறேன் எனக்கூறி தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டவர்களின் ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும் இதற்கு தமிழ் திரையிலகம் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீரெட்டி குறித்து இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது, ஊசி இடம் கொடுக்காம நூல் எப்படி நுழையும் ? இவர் அனுமதி கொடுத்துள்ளார்.

இவர் சம்மதத்துடன் எல்லாம் நடந்திருக்கையில், அதனை வைத்து இவர் விளம்பரம் தேடிக்கொள்ளக்கூடாது. இதற்காக ஒட்டுமொத்த சினிமா துறையை குறைசொல்லக்கூடாது என கூறியுள்ளார்.