ஷேர் சாட் செயலியால் வந்த வினை : பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்!!

197

ஈரோடு..

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. அவர் தற்போது பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால் இந்த மாணவி ஆன்லைன் மூலம் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வந்துள்ளார்.

அப்போது ஷேர் சாட் என்ற செயலியின் மூலம் பழனியை அடுத்த வயலூர் பகுதியை சேர்ந்த ஜேசுதாஸ் (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது ஜேசுதாஸ் அந்த மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

அந்த சிறுமியிடம் ஜேசுதாஸ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது வலையில் சிறுமியை விழ வைத்துள்ளார். மேலும் அந்த மாணவியுடன் இருந்ததை மாணவிக்கு தெரியாமல் தனது செல்போனில் படம் பிடித்து வைத்து இருந்துள்ளார். பின்னர் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜேசுதாஸ் பலமுறை மாணவி வீட்டிற்கு சென்று அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

ஜேசுதாஸ் நடவடிக்கை பிடிக்காத அந்த மாணவி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை வாட்ஸ்அப் எண்ணிற்கு ஜேசுதாஸ் அந்த மாணவியுடன் ஒன்றாக இருந்த புகைப்படத்தை அனுப்பி தனக்கு பணம் தரவேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். அப்படி பணம் கொடுக்க மறுத்து விட்டால் இந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவி இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேசுதாஸை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது ஜெயசுதாஸ் கோவையில் உள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும்,

மாணவி தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது தந்தைக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதையும் ஒப்புக் கொண்டார். இதனை எடுத்து ஜேசுதாஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி சென்ற சிறுமியை வாலிபர் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.