மருமகனுடன் மாமியார் உல்லாசம் : நள்ளிரவில் ஊர் எல்லையில் நடந்த பயங்கரம்!!

401

ராஜஸ்தான்….

மாமியார் மருமகன் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் இருவரும் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாகக் கொண்டு அரங்கேறி வருகிறது. வரம்பு மீறும் கள்ளக்காதல் சம்பவங்களால் அதில் ஈடுபடுவோரின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இருவரின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ஒட்டுமொத்த குடும்பத்தின் மானம் காற்றில் பறக்க விடப்படுகிறது, இயற்கைக்கு முரணான காதல் சமூகத்தில் பரவலாக அதிகரித்து வருகிறது.

சித்தியுடன் காதல், மாமியாருடன் மருமகன் கள்ளக்காதல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இப்படியான ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மேற்கு ராஜஸ்தான் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அந்த இளைஞருக்கு அவரது சாமியார் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவரது மாமியார் மருமகனை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் கடந்த சில மாதங்களாக தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவர்கள் விவகாரம் வெளியில் தெரிந்தது.

இதனால் குடும்பத்தில் குழப்பம் வெடித்தது. இனி இருவரும் சேர்ந்து வாழ முடியாது என முடிவெடுத்த அவர்கள் லாங்கோரா பேன்டா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஊர் ஊர் எல்லையில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். அப்போது பார்மர்- ராம்சேட் சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மரத்தில் இரண்டு சடலங்கள் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக உள்ளூர் போலீசிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் அங்கு திரளாகக் கூடினர், இதைத் தொடர்ந்து கிராமபுற போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் மீட்டனர்.

அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது, இந்நிலையில் இறந்த இருவரின் பின்னணி குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருமகன்- மாமியார் கள்ளக்காதலில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தற்கொலைகளின் தலைநகரமாக பார்மர் மாவட்டம் மாறிவருகிறது. காதல் கள்ளக்காதல்களால் தற்கொலைச் சம்பவங்கள் அப்பகுதியில் அரங்கேறி வருகின்றன. இதனால் அம்மாவட்ட போலீசார் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.