இந்த ஒரே ஒரு இலை புற்றுநோயை அடியோடு அழிக்குமாம்!…

1235

நோய்களில் பெரிது என்றால் அது புற்றுநோயாகத்தான் இருக்கும். உடலை உருக்குலைத்து நோய்யுற்றவரை கொல்ல கூடியது. உலகில் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் வந்த அறிகுறிகள் கூட தெரியாமல் பலர் இறந்துள்ளனர். அவ்வளவு கொடியது இந்த நோய். புற்றுநோய் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை முற்றிலும் பாதிக்க செய்து, உயிரை பறித்துவிடும்.

முதல் நிலை புற்றுநோயை சரி செய்ய முடியும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் மிகவும் கடுமையான நிலைக்கு புற்றுநோய் முற்றிவிட்டால் அவர்களை குணப்படுத்துவது கடினம். இவ்வளவு கொடிய நோயை சரி செய்ய பப்பாளி இலைகளே போதும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. இது உண்மைதானா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

புற்றுநோய் செல்கள்:புற்றுநோயை உருவாக்குவது இந்த புற்றுநோய் செல்களே. ஆரம்பத்தில் சிறிய கட்டிகள் போன்று தோன்றி பிறகு பெரிதாகும். கொழுப்பு கட்டிகள் போல இருக்கும் இவை குறைந்த காலத்திலேயே அதிக எண்ணிக்கையுடன் பல மடங்காகும். இவற்றின் எண்ணிக்கையை பொருத்தே அவற்றின் நிலை அறியப்படும். அதாவது அதிக எண்ணிக்கையில் இந்த செல்கள் இருந்தால் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பது கடினம்.

பப்பாளி இலை:பொதுவாவே நாம் எந்த பழத்தின் இலைகள் என்றாலும் அதை கண்டு கொள்ளவே மாட்டோம். ஆனால் இந்த பப்பாளி இலையில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால் உடலில் பல நன்மைகளை செய்ய கூடியது. எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செல்களை பலமாக வைக்க உதவும். ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் உடலுக்கு வலிமை தரும். புற்று நோய் செல்களை அழித்து, இனி அவை உடலில் வராத அளவிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். பப்பாளி இலையின் சாற்றை கொண்டு கல்லீரல், கணையம், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முடியும்.

புற்று நோயை குணப்படுத்துமா..?:பல ஆராய்ச்சிகள் பப்பாளி இலையை சாப்பிட்டால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்றே சொல்கிறது. “பாப்பின்”(papain ) என்ற நொதி பப்பாளி இலையில் உள்ளது. இது ரத்த நாளங்களை சரி செய்து நோயற்ற வாழ்வை தரும். குணப்படுத்த முடியாத பல நோய்களையும் இது குணபடுத்தும் ஆற்றல் பெற்றது. குறிப்பாக புற்றுநோயை சரி செய்ய அசிடோஜெனின்(acetogenin) என்ற மூல பொருள் உதவுகிறது. சிதைவடைந்த ரத்த செல்களை மீண்டும் உயிர்ப்பிக்க செய்து உடலில் நலத்தை பாதுகாக்கிறது.

பயன்படுத்தும் முறை:முதலில் ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 7 பப்பாளி இலைகளை நறுக்கி அதில் போடவும். மிதமான சூட்டில் 2 மணி நேரம் வரை அதனை கொதிக்க விட்டு, நீர் பாதியாகிய பின் இறக்கவும். குளிர்ந்த பிறகு வடிகட்டி 50 ml அளவு இதனை குடிக்கவும். முக்கிய குறிப்பு, சாப்பிடும் முன்பே இந்த நீரை பருக வேண்டும். எஞ்சிய நீரை செராமிக் பாத்திரத்தில் போட்டு குளிர் சாதன பெட்டியில் வைத்தும் குடிக்கலாம். இதனை ஒரு நாளைக்கு 2 முறை குடிப்பது நல்லது. இவ்வாறு செய்து வந்தால் புற்றுநோயை சரி செய்யலாம்.

பப்பாளி கேப்சுயூல்:புற்றுநோய் குணமடைய வேண்டும் என்றால் பப்பாளியை கேப்சுயூல் வடிவத்திலும் உட்கொள்ளலாம். பப்பாளி இலைகளை வெயிலில் உலர வைத்து, காய்ந்த பிறகு நன்கு பொடி போல் செய்யவும். பிறகு கேப்சுயூல் போன்று அதனை 1 நாளைக்கு 2 என சாப்பிடலாம். இப்போதெல்லாம் இந்த கேப்சுயூல்கள் கடைகளிலும் கிடைக்கிறது. அதிகமாக இதனை எடுத்து கொண்டால் சில பக்க விளைவுகளை தரும். எனவே குறிப்பிட்ட அளவே சாப்பிடவும்.

இரத்த தட்டுக்கள்:உடலின் பலத்தை நிர்ணயிப்பதே இந்த இரத்த தட்டுக்கள்தான். இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் அது எதிர்ப்பு சக்தியை குறைக்கும். பப்பாளி இலை இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை சரியான அளவில் வைக்க பயன்படும். இதனால் புற்றுநோய் செல்கள் இரத்த தட்டுக்களை பாதிக்காத அளவு காக்கிறது. பப்பாளி இலை டெங்கு போன்ற உயிர் கொல்லி நோய்களையும் குணப்படுத்தும்.

ஊட்டச்சத்து குறைபாடு:பப்பாளி இலைகளில் வைட்டமின் எ,பி,சி,டி, மற்றும் ஈ ஆகியவை அதிகம் உள்ளது. அத்துடன் flavonoids and carotenes போன்றவை உடலின் எதிர்ப்பு சக்திக்கு உறுதுணையாக இருக்கும். இவை அதிக ஊட்டச்சத்துக்களை தந்து பிணிகள் அனைத்தையும் குணப்படுத்தும். பசி இன்மை போன்ற தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வை தரும். கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்த்தல் நல்லது. இந்த பப்பாளி இலையை உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது நல்லது.