கருணாநிதியின் சவப்பெட்டிக்குள் இருந்த அவரது முதல் குழந்தை : நெகிழ்ச்சி புகைப்படம்!!

1112

திமுக கலைஞர் கருணாநிதி தனது முதல் குழந்தை என்று அழைப்பது முரசொலி பத்திரிக்கைத்தான்.

முதலில் போர்வாள் என்று பெயர் சூட்டி பின்பு முரசொலி என்று பெயரிட்டார். ஆரம்பத்தில் துண்டறிக்கையாக வெளிவந்து கருணாநிதியின் கடின உழைப்பால் பத்திரிக்கையாக மாறியது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் அவரின் தலைமாட்டில் முரசொலி பத்திரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நீண்ட ஓய்வை பார்த்து அதுவும் ஒரு ஓரத்தில் அழுதுக் கொண்டிருக்கிறது.

மரணத்தில் தனது முதல் குழந்தை தன்னுடன் வருவதைக் கண்டு கண்டிப்பாக மகிழ்ச்சி அடைந்திருப்பார் கலைஞர்.

முரசொலி ஒரு வியாபார நோக்கமுடைய பத்திரிகை இல்லை. அது தலைவன்- தொண்டர்களிடையேயான உணர்வுள்ள உறவுப்பாலம் என்று மேடையில் உணர்ச்சியுடன் பதிவு செய்திருந்தார் கலைஞர் கருணாநிதி. அந்த உறவு பாலம் தான் தற்போது அவரின் தலைமாட்டில் வைக்கப்பட்டு உள்ளது.