என் கணவரை கொல்லனும் சீக்கிரம் வா : இளம் மனைவியின் அதிரவைக்கும் செயல்!!

649

இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜகன் நாயக் (35). இவர் மனைவி தேவிகா. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தேவிகாவுக்கு நபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இது குறித்து அறிந்த ஜகன், தேவிகாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மது போதையில் வீட்டுக்கு வந்த ஜகன் மனைவியுடன் மீண்டும் சண்டை போட்டுள்ளார்.

இதனால் ஆத்திமடைந்த தேவிகா, கள்ளக்காதலனுக்கு போன் செய்து கணவரை கொல்ல வேண்டும் என அழைத்துள்ளார். அவர் அங்கு வந்த நிலையில் இருவரும் சேர்ந்து கொசு மருந்தை ஜகன் வாயில் ஊற்றி பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

அங்கு ஏற்பட்ட சத்தம் காரணமாக வீட்டு உரிமையாளர் வினோத் ஜகன் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து தேவிகாவின் காதலன் அங்கிருந்து தப்பியோட, பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார் வினோத்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஜகன் சடலத்தை கைப்பற்றிவிட்டு தேவிகாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நபரை பொலிசார் தேடி வருகிறார்கள்.