10 வயதுச் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் : பொதுமக்கள் மத்தியில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை!!

1689

ஏமன் நாட்டில் 10 அவரது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 3 பேருக்கு பொதுமக்கள் மத்தியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா உட்பட பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில், பாலியல் துஸ்பிரயோகம், கொலை மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கல்லால் அடித்தல், துப்பாக்கியால் சுடுதல் பின்னர் தூக்கில் தொங்க விடுதல் போன்ற முறைகளின் அடிப்படையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

இந்த நிலையில் 10 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்து, கொடூரமாக கொலை செய்த மூன்று பேருக்கு ஏமனில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் சம்மந்தப்பட்ட மூன்று பேரின் தலையையும் முகம் குப்புற இருக்குமாறு, ஒரு தார்பாயின் மேல் ரத்தம் விழுமாறு 5 முறை துப்பாக்கியால் சுட்டு மரணமடைய செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் மூன்று பேரையும் கிரேன் மூலம் கயிற்றில் ஏற்றி தூக்கில் தொங்கவிட்டு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டுள்ளது.