சுக்ரன் பெயர்ச்சி… அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

2100

மனிதர்களுக்கு கிடைக்க கூடிய பல வகையான சுகங்களுக்கு காரகன் சுக்கிர பகவான் ஆவார். இந்த சுக்கிர பகவான் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 12.41 மணியளவில் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இந்த பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமதம் ஆகும். உடலாரோக்கியம் அவ்வப்போது பாதிக்கபடும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. தன வரவுகள் சராசரியாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டு.

ரிஷபம்:நீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் சற்று தாமத்திற்க்கு பின்பே வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் இணக்கம் உண்டாகும். பெண்களின் உடல்நிலை பாதிக்கபடக்கூடும். அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திகொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மிதுனம்:வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். வீட்டிலும் வெளியிடத்திலும் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சுமாரான நிகர லாபம் இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உடல்நலக் குறைபாடுகளும் அவ்வப்போது ஏற்பட்டு விலகும்.

கடகம்:உற்றார் உறவினரிடம் மதிப்பு ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைப்பது நலம். மாணவர்கள் கல்வியில் சற்று சிறந்த நிலையை அடைவார்கள். பண வரவு செலவுகளில் சற்று கவனம் அவசியம். தொலைதூரப் பயணங்களால் வெற்றி உண்டாகும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

சிம்மம்:திருமணம் காலதாமதம் ஆனவர்களுக்கு திருமணம் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பணிபுரிபவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் சற்று தாமதமாகும். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி உண்டாகும்.

கன்னி:உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகளால் உங்கள் குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் வாங்கலாம். வாங்கிய கடன்கள் அனைத்தையும் முழுமையாக அடைத்து மனநிம்மதி பெறலாம். கணவன் மனைவி இடையே சிறிய மனஸ்தாபங்கள் எழலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சமுதாயத்தால் மதிக்கப்படும் நிலை உண்டாகும்.

துலாம்:உங்களின் தொழில் வியாபாரகளில் நல்ல லாபம் கிடைக்கும் . பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் பல மங்கல நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு புத்திர பேறு கிட்டும். அதிக அலைச்சலால் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்பது நலம்.

விருச்சிகம்:உடலாரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரங்கள் சராசரியான நிலையில் இருக்கும். எந்த ஒரு விடயமும் சற்று தாமதத்திற்கு பின்பே நிறைவேறும். பெண்கள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:அரசிலியலிலிருப்பவர்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் இதுவரை இருந்த தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் சரியாக வந்து சேரா நிலை இருக்கும். ஒரு உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். பணியிடங்களில் பிறரின் சூழ்ச்சிகளுக்கு ஆளாக நேரும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி செய்ய வேண்டும்.

மகரம்:உங்களுக்கு உடலில் நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படலாம். வீட்டின் பெண்கள் உடல் நிலை சற்று பாதிப்படையும். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றி பெறும்.புதிய வீடு, வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும். புனித யாத்திரையை சிலர் மேற்கொள்வீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும்.

கும்பம்:மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். உறவினர்கள் மற்றும் வெளியாட்களிடம் மதிப்பும் மரியாதையும் மிகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழில்களில் நல்ல லாபம் ஏற்படும். கலைஞர்களுக்கு வெளிநாடுகள் செல்லும் யோகம் உண்டாகும். விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

மீனம்:அரசியல்வாதிகள் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம். தொழில் வியாபாரங்களில் சுமாரான லாபங்களே கிடைக்கும். உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் குழந்தைகள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். சிலருக்கு கடன்கள் வாங்கும் நிலை உண்டாகும்.