காதலியுடன் கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்த மனைவி : இப்படி ஒரு தியாகமா? வியப்பூட்டும் காரணம்!!

2006

திருப்பதியில்..

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். இவர் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் தொடர்பு ஏற்பட்டு அந்த தொடர்பு காதலாக மாறி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர்கள் டிக் டாக்கில் பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில், விமலா சில நாட்களாகவே கவலையுடன் இருந்து வந்துள்ளார். இதற்கு காரணம் என்ன என கணவர் கல்யாண் கேட்க, அப்போது தான் விசாகபட்டனத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவர் தன்னை சந்தித்தகாக் கூறினார். திருமணத்திற்கு முன்பு கல்யாணும், நித்யாஸ்ரீ என்பவரும் டிக் டாக் வீடியோ உருவாக்கி வந்துள்ளனர்.

அப்போது இருவரும் காதலித்து உள்ளனர். அதன் பின் சில காரணங்களால் முறிந்தது. தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது. கல்யாண் கடைசியில் அவரை மறந்து விமலாவை மணந்து உள்ளார். ஆனால், திடீரென்று இப்போது நித்யாஸ்ரீ இவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து உள்ளார்.இது குறித்து விமலாவிடம் காதல் விவரத்தை கூறி, அவரை விட்டு பிரிந்து செல்ல முடியவில்லை என்றும் எங்களை ஒன்று சேர்த்து வைத்து என்று கெஞ்சினாள்.அதற்கு எந்த மனைவியும் செய்யாத ஒரு தியாகத்தை செய்ய விமலா தயாராகிவிட்டார்.

தொடர்ந்து, விமலா தனது கணவர் கல்யாணை அவரது காதலி நித்யஸ்ரீயை திருமணம் செய்து வைக்க தயாரானார். ஆனால் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டார். இதனிடையே, கல்யாண் முதல் திருமணத்திற்கு பின், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இருவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தியாகமூர்த்தி விமலா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.