வெளிநாட்டிலிருந்து மனைவியை பார்க்க ஆசையாக வந்த கணவனுக்கு நேர்ந்த சோகம்!!

528

பெல்ஜியமிலிருந்து மனைவியை பார்க்க இந்தியாவுக்கு வந்த கணவன் மனைவியை பார்க்கும் முன்னரே உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் தேஜஸ் துபே (32). இவர் பெல்ஜியமில் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி புனேவில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் தேஜஸின் மனைவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிறந்தநாள் ஆகும். அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த தேஜஸ் இந்தியா வந்த நிலையில் வியாழன் அன்று தனது இரண்டு நண்பர்களுடன் மும்பையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் தங்கியிருந்தார்.

வெள்ளிக்கிழமை மனைவியை காண புனே செல்லலாம் என நினைத்திருந்தார் தேஜஸ். இந்நிலையில் நண்பர்களுடன் தங்கிய அறையின் ஜன்னலில் கம்பிகள் இல்லை. இதை கவனிக்காத தேஜஸ் தூக்க கலக்கத்தில் இரண்டாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார்.

தேஜஸின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதனிடையில் பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், தேஜஸின் மரணத்தில் எந்தவொரு சந்தேகப்படும்படியான விடயங்கள் இல்லை என தெரியவந்துள்ளது.