10 வருட காதலை மறந்து காதலியை ரத்த வெள்ளத்தில் சரித்தது ஏன்? காதலன் பரபரப்பு வாக்குமூலம்

1204

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கமருன்னிசா என்ற பள்ளி ஆசிரியையை அவரது காதலன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த் என்பவரை கமருன்னிசா கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று பள்ளிக்கு கமருன்னிசா சென்றுகொண்டிருக்கையில், வழிமறித்து பிரச்சனை செய்த ஆனந்த் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து குத்திகொலை செய்துவிட்டு தப்பத்து ஓடியுள்ளார்.

இந்நிலையில், தப்பியோடிய ஆனந்த் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தியதில், அதற்கான காரணத்தை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து நானும், கமருன்னிசாவும் காதலித்து வருகிறோம், நாங்கள் காதலித்தபோது அவருக்கு தேவையான அனைத்தையும் வாங்கிகொடுத்தேன், ஆனால் இடையில் திடீரென என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

என்னை திருமணம் செய்யவும் மறுத்து விட்டார். மேலும் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயம் செய்தனர். இதனால் எனது நண்பருடன் சேர்ந்து அவளை கொலை செய்ய திட்டமிட்டு அதன்படி செய்தேன் என கூறியுள்ளார்.

ஆனந்த் மது அருந்திவிட்டு திரிகிறார் என்ற காரணத்தால் கமருன்னிசா அவரை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.