காதலனுடன் ஓடிப்போன காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

1147

சென்னையில் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பொலிசாரிடம் சிக்கிய நிலையில் அழைத்து வந்த காதலன் திருடன் என தெரியவந்ததால் காதலி அதிர்ச்சியடைந்தார்.

மெரினாவில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அதில் மூவரும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் இருவர் காதலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனான ஹரிஹரன், தனது காதலியை வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வர வலியுறுத்தியுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் ஹரிஹரனிடம் நடத்திய விசாரணையில் அவர் செல்போன் திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. இது அவரின் காதலியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து பெண்ணின் பெற்றோரை காவல்நிலையத்திற்கு வரவழைத்த பொலிசார் அவரை அனுப்பி வைத்த நிலையில் ஹரிஹரனிடம் விசாரித்து வருகிறார்கள்.