பிரித்தானியாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்த புதுமாப்பிள்ளை : இரண்டே வாரத்தில் மனைவியுடன் சேர்ந்து இறந்த சோகம்!!

925

இந்தியாவில் திருமணமான இரண்டு வாரத்தில் புதுமண தம்பதி கார் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் சித்ராஜ் (25). இவருக்கும் அனிதா (21) என்ற பெண்ணுக்கும் இரு வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை புதுமண தம்பதி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் இருந்த டிராக்டர் வாகனத்தில், கார் படு பயங்கரமாக மோதியதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்தனர்.

அருகிலிருந்தவர்கள் சித்ராஜையும், அனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தது விட்டது தெரியவந்தது.

சித்ராஜின் தந்தை புஷ்கர் ராணா கூறுகையில், பிரித்தானியாவிலிருந்து 9 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தான் சித்ராஜ் ஊருக்கு வந்தார்.

சில நாட்களில் மனைவியுடன் சித்ராஜ் தேனிலவுக்கு செல்ல நினைத்திருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துவிட்டது.

காலையில் கிளம்பும் போது விரைவில் வீடு திரும்புவோம் என சித்ராஜும், அனிதாவும் கூறினார்கள். ஆனால் அவர்களை கடைசியாக பார்த்த நிமிடம் அது தான் என அப்போது எனக்கு தெரியாது என சோகத்துடன் கூறியுள்ளார்.