பறவையின் வாய்க்குள் தலையை வைத்து செல்பி எடுத்த மாணவர் : வழக்குப்பதிவு செய்த அரசு!!

560

நமீபியாவில் பெலிகன் பறவையின் நீண்ட அலகுக்குள் தலையைவிட்டு செல்பி எடுத்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நமீபியா நாட்டில் மிக நீண்ட கூர்மையான அலகு கொண்ட பெலிகன் பறவைகள் பயணிகளின் படகில் வந்து அமர்ந்து பயணம் செய்தன.

அப்போது அந்த படகில் இருந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜூவான் வாண்டென் என்ற மாணவர் இருந்தார். பெலிகன் பறவைகளை கண்டதும் அந்த மாணவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அந்த பறவை ஒன்றின் அலகுக்குள் தனது தலையை வைத்து செல்பி எடுத்துள்ளார். அப்போது பெலிகன் பறவையும் அதற்கு ஏற்றபடி தலையை கடிப்பது போன்று பாவனை செய்தது.

இந்நிலையில், ஜூவான் மீது பறவையை துன்புறுத்தியதாக அந்நாட்டு அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.