என்னை கணவருடன் சேர்த்து வைங்க…. இளம்பெண் தந்தையுடன் எடுத்த துணிச்சல் முடிவு!!

1160

திருச்சி….

திருச்சி மாவட்டம், முசிறியில் வசித்து வருபவர் மருதை வீரன். அவரது மகள் 28 வயது நர்மதா. இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பாண்டியன் நகரில் வசித்து வரும் இளைஞர் ஹரிராஜூவை காதலித்தார். இருவரும் செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டு ரிஜிஸ்டர் ஆபிசில் பதிவும் செய்து கொண்டனர். இதன்பிறகு ஹரிராஜ் பெற்றோருடன் வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இருவரும் கொங்கு மெயின் ரோடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ஹரிராஜூம், நர்மதாவும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இடையில் ஆடிமாதம் வந்ததால் நர்மதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

மீண்டும் வீட்டிற்கு வந்தபோது சாதியை காரணம் காட்டி நர்மதாவை, அவரது காதல் கணவர் ஹரிராஜ் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். கடந்த 3 மாதங்களாக ஹரிராஜும் , அவரது பெற்றோரும் நர்மதாவை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்துள்ளனர்.

இது குறித்து நர்மதா திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், கொங்கு நகர் சரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காதல் தம்பதியருக்கு கவுன்சிலிங் காவல்துறையினர் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

இதன்பிறகு நர்மதா மீண்டும் மகளிர் காவல் நிலையத்தை நர்மதா அணுகியபோது காவல்துறையினர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து நர்மதா தனது காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி பாண்டியன் நகரில் உள்ள கணவர் வீட்டின் முன்பு தனது தந்தை மருதை வீரனுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.