எங்களை கருணைக் கொலை செய்யுங்கள் : அதிர வைத்த அழகிய குடும்பம் : உருக வைக்கும் பின்னணி!!

511

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்தோடு வந்த கூலித் தொழிலாளி எங்களை கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதியுங்கள் என மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜேந்திரன் என்ற கூலி தொழிலாளிக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வசித்துவந்த வீடு பழுதடைந்து இடியும் நிலையில் இருந்ததால், அதை இடித்துவிட்டு பிரதமரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் நிதி பெற்று வீடு கட்டி வருகிறார்கள்.

வீட்டின் மேல், மின்சாரக் கம்பிகள் செல்வதால் கட்டிடத்தை மேல் எழுப்ப முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து மின் வாரியத்தை அணுகிய ராஜேந்திரன் நிலைமையை விவரித்திருக்கிறார்.

ஆனால் கரண்ட் கம்பியை வேறு வழிக்கு திருப்பிவிட ரு. 1 லட்சத்து 20 ஆயிரத்தை அவர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால் அவரிடம் பணம் இல்லாத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் இது சம்பந்தமாக பலமுறை மனு அளித்து ஓய்ந்து போன நிலையில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜேந்திரனின் கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி பிரதமரின் அலுவலகத்தில் இருந்து பதில் கடிதம் வந்தும், அதை அதிகாரிகள் செய்யவில்லை.

இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜேந்திரன் தயவுசெய்து எங்களை குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள அனுமதியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறுகையில், இது சம்பந்தமாக நான் கடந்த ஒன்றரை வருடங்களாக அலைந்தும், மனு கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இருந்த பழைய வீட்டையும் இடித்துவிட்டு இன்றைக்கு மிகவும் சிரமத்தோடு குடும்பம் நடத்தி வருகிறேன். பாத்ரூம் வசதி இல்லாமல், என்னுடைய 2 பெண் பிள்ளைகளும் இரவு நேரத்தில் தெருவில் ஆள் நடமாட்டம் குறைந்த பின்னர் தான் குளிக்கிறார்கள்.

இனிமேலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கையில்லை. எனவேதான் குடும்பத்தோடு கருணைக் கொலை செய்து விடுங்கள் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறேன் என கண்ணீரோடு கூறியுள்ளார்.