சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் நடிகை ஸ்ரீரெட்டி.
ஏஆர் முருகதாஸ், சுந்தர் சி, ராகாவா லாரான்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் மீது குற்றம்சாட்டி வந்த ஸ்ரீரெட்டி, தற்போது கிரிக்கெட் வீரர் மீது புகார் பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார்.
கிரிக்கெட் கடவுள் என அனைவராலும் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் மீது தனது பேஸ்புக் பக்கத்தில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் தனது பேஸ்புக் பதிவில், சச்சின்தெண்டுல்கரன் என்ற ஒரு ரொமாண்டிக்கான ஆள், ஐதராபாத் வந்த போது, “சார்மி’ங்” ஆன பெண்ணை சந்தித்தார். அதற்கு, சாமுண்டேஸ்வர் சாமி என்பவர் உடந்தை” எனத் தெரிவித்துள்ளார். இதில் சார்மிங் பெண் என அவர் குறிப்பிடுவது நடிகை சார்மி எனக் கூறப்படுகிறது.
ஸ்ரீரெட்டியின் இந்தப் புகார் தொடர்பாக சச்சின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்போ அல்லது பதிலோ வரவில்லை.