நானும் அபிராமியும் ஒன்றா? கண்ணீர் விட்டு கதறிய நடிகை நிலானி!!

695

அபிராமி

கள்ளக்காதலனுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது வருத்தமளிக்கிறது என நடிகை நிலானி கூறியுள்ளார்.

சீரியல் நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்தார்.

இந்நிலையில் காந்தியும் நிலானியும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகியது. இதனால் நிலானி காந்தி லலித்குமாரை காதலித்து ஏமாற்றியது உண்மை என கூறப்பட்டது.

இதுதொடர்பான விசாரணைக்கு பயந்து நிலானி தலைமறைவானார் என கூறப்பட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பல விடயங்களை அவர் கூறினார்.

அப்போது காந்தி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிய அவர், தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றார்.

மேலும் கள்ளக்காதலனுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதாக வருத்தப்பட்ட நிலானி நானும் அபிராமியும் ஒன்றா என கேட்டு கண்ணீர்விட்டு கதறியுள்ளார்.