மகளின் திருமணத்திற்காக தெருவில் பிச்சை எடுத்த தந்தை!!

686

பிச்சை எடுத்த தந்தை

வேலூர் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக பிச்சை எடுத்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரான்ஜி என்பவருக்கு 3 மகள்கள், இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் தனது மகள்களின் திருமணத்திற்காக மகாத்மா காந்தி வேடம் அணிந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிச்சை எடுத்து எடுத்து வருகிறார்.

இன்று குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் எதிரில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, அவரை பார்த்து சில்லரை போட்டு சென்றனர்.

இதனை பார்த்த புறக்காவல் நிலைய காவலர்கள் முதியவரை அழைத்து விசாரித்த போது மகள்களின் திருமணத்திற்காக பணம் சேர்க்க பிச்சை எடுப்பதாக அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் காவலர்கள், தேசத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுப்பது தவறு எனக் கூறி முதியவரை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.