8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி!!

633

பாலியல் தொல்லை

8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு செருப்பு மாலை அணிவித்து எருமை மாட்டின் மீது கிராமவாசிகள் ஏற்றியுள்ளனர். உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் எட்டு வயது சிறுவனுக்கு ஒரு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எட்டு வயது சிறுவன் தனது பெற்றோரிடம் தனக்கு ஒரு இளைஞர் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த இளைஞரை கிராமவாசிகள் அனைவரும் சேர்ந்து தண்டனை கொடுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை செய்துள்ளனர்.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அழைத்து அவரது முகத்தில் கரியை பூசி, அவருக்கு செருப்பால் மாலை அணிவித்து எறுமை மாட்டின் மீது ஏற்றி கிராமம் முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து, அப்பகுதி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.