நடிகை நிலானியை பகிரங்கமாக மிரட்டிய காதலன் காந்தி : பரபரப்பு ஆடியோ வெளியானது!!

525

நடிகை நிலானி

சீரியல் நடிகை நிலானி லலித்குமாருடன் நடத்திய தொலைபேசி ஆடியோவை ரிலீஸ் செய்துள்ளார். நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நிலானி, லலித்குமார் எப்போதும் தன்னை பெட்ரோல் கேனுடன் மிரட்டி வந்ததாக கூறினார். இதையடுத்து காந்தி லலித்குமார் எப்படி மிரட்டினார் என்பது குறித்து பரபரப்பு ஆடியோவை நிலானி வெளியிட்டுள்ளார்.

அதில், நிலானிக்கு போன் செய்து லலித்குமார் பேசுகையில், பொலிசுக்கு போன் செய்தியே எந்த நம்பருக்கு போட்ட, நான் வேண்டுமென்றால் நம்பர் தரவா, கமிஷனர் நம்பர் வேண்டுமா சொல் தருகிறேன். இப்பவே பொலிஸ் ஸ்டேஷனுக்கு வா என்கிறார்.

அதற்கு நிலானியோ அழுது கொண்டே என்னை விட்டு விடு ஏன் டார்ச்சர் செய்கிறாய். நீ பெரிய ஆள்தான். நான் உன் முன்னால் தூசு. நீ என் தொழிலை கெடுக்க போகிறாய் என்று சொன்னாய், உன்னால் முடிந்ததை செய்து கொள். இதை நான் சவாலாக கூறவில்லை, உனக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது எனக்கு தெரியும். நான் பொலிஸ் ஸ்டேஷனுக்கு இப்போது வரமாட்டேன். காலையில் வருகிறேன் என்று கூறுகிறார் நிலானி.

பின்னர் லலித்குமாரின் டார்ச்சர் தாங்க முடியாமல் பொலிஸ் நிலையத்துக்கு போனை கான்பிரன்ஸ் காலில் போடுகிறார். அப்போது அந்த இன்ஸ்பெக்டரிடம் சார் என்னை போன் செய்து டார்ச்சர் செய்கிறார். அவரும் லைனில் இருக்கிறார் பேசுங்க என்றார்.

உடனே இன்ஸ்பெக்டர், ஏன்யா உங்களுக்கு நிலானியின் நம்பரே தெரியாது என்றீரே. இப்ப எப்படி போன் செய்தீர். எதற்காக அந்தம்மாவை தொல்லை செய்கிறீர்கள். நான் உங்களை எச்சரித்து தானே அனுப்பினேன் என்கிறார்.

அப்போது அடங்க மறுக்கும் லலித்குமார், நீங்கள் பொலிஸ் என்பதற்காக என்னையே மிரட்டுகிறீர்களா என்று அவர் பங்குக்கும் கத்துகிறார். இப்படியாக இந்த உரையாடல் செல்கிறது. இந்த ஆடியோவை பார்க்கும் போது நிலானியின் நம்பரே தனக்கு தெரியாது என்று கூறிய லலித்குமார் அவரை மிரட்டும் தொனியில் பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.