கணவனுக்கு துரோகம் செய்த மனைவிக்கு இறுதியில் நடந்த சோக சம்பவம்!!

875

நாமக்கல் மாவட்டத்தில் புருஷனுக்கு துரோகம் செய்து அரசனை நம்பி சென்ற பெண் இறுதியில் அவரது உயிரை விட்டுள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

சேகர் – பார்வதி தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களிடம் கார் ஓட்டுநராக இருந்தவர் ஈஸ்வரன்.

சில நாட்களில் பார்வதி- ஈஸ்வரன் கள்ள தொடர்பு ஏற்பட்டு பிறகு பார்வதி கணவனை விட்டு பிரிந்து ஈஸ்வரனோடு குமாரபாளையம் வந்து இருவரும் குடும்பம் நடத்தினார்கள். ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமனமாகி மல்லிகா என்ற மனைவி உண்டு.

இந்நிலையில் பார்வதி கோவையில் இருந்த சொத்துக்களை விற்று சுமார் 1.50 கோடி வரை ஈஸ்வரனுக்கு அவ்வப்போது கொடுத்து வந்துள்ளார்.

பார்வதி மீதான ஈஸ்வரனின் மோகம் நாளுக்கு நாள் குறைய தொடங்கியது. பார்வதி வீட்டுக்குச் செல்வதை ஈஸ்வரன் தவிர்த்து வர இருவருக்கும் சண்டை ஏற்பட்டது

. இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பி தர வேன்டும் என குமாரபாளையம் காவல் நிலையத்தில் பார்வதி புகார் கொடுத்துள்ளார்.

பிறகு ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி மல்லிகா, சகோதர் ஜம்பு என்பவர் பார்வதியை கடுமையாக மிரட்டியுள்ளனர். இதையும் காவல் நிலையத்தில் பார்வதி புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் பொலிசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்து காவல் நிலையத்திற்கு முன்பே போய் உடலில் மண்ணென்னை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

பொலிசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடலில் பற்றிய தீயை அணைத்து ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.