கூட்டணி சேர்ந்து ஏமாற்றும் ஐஸ்வர்யா-யாஷிகா : ட்விட்டரில் வறுத்தெடுத்த பிரபலம்!!

980

ஐஸ்வர்யா-யாஷிகா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் தற்போது இரண்டு பிரிவாக உள்ளனர். தமிழ் பேசும் பெண்கள் ஒரு புறமும், ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் மற்றொரு புறமும் உள்ளனர்.

யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து செய்யும் செயல்கள் மற்ற போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் எரிச்சலடைய வைக்கிறது.இது பற்றி பேசியுள்ள பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காயத்ரி ரகுராம், “தோழிகளாக இருப்பது சரி, ஆனால் நீங்கள் இருவரும் இப்படி கூட்டணி சேர்ந்து டாஸ்க் செய்வது பலம் அல்ல.. அது உங்களை பலவீனமாக காட்டும். மொத்த போட்டியையும் அது கெடுகிறது” என கூறியுள்ளார்.

“மற்ற போட்டியாளர்கள் பலமானவர்கள் போல இது காட்டும். உங்கள் உத்தியை மாற்றிக்கொள்ளுங்கள்” என காயத்தி மற்றொரு ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.