பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது : அதிர்ச்சிப் பின்னணி!!

937

தமிழ்நாட்டில் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அம்மாணவி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் துடித்துள்ளார்.

இது குறித்து தனது தாயிடம் மாணவி கூறிய நிலையில் மகளை அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். இதில் மாணவி 6 மாத கருவுற்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் மகளிடம் இது குறித்து விசாரித்தார். அப்போது அவரின் தந்தையான மிக்கேல் என்பவர், மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து பொலிசுக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில் வழக்குப் பதிவு செய்த பொலிசார் மிக்கேலை கைது செய்துள்ளனர்.