கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய வாலிபர் : கருவை கலைத்ததால் ஏற்பட்ட விபரீதம்!!

1349

சென்னையில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொன்னேரியை சேர்ந்தவர் சவுந்தர். இவரது நண்பர் சின்னதுரை.

இருவரும் கடந்தாண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் மோகனபிரியா (23) என்ற பெண்ணை அங்கு சந்தித்தனர்.

இதையடுத்து இருவரும் மோகனபிரியாவுடன் நட்பான நிலையில் சவுந்தருக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. சவுந்தர் திருமணமானவர் என்று தெரிந்தும் மோகனபிரியா அவரை காதலித்துள்ளார்.

இந்த விடயம் சவுந்தரின் மனைவிக்கு தெரிய வந்ததையடுத்து சவுந்தரையும், மோகனபிரியாவையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் சவுந்தர் மூலம் மோகனபிரியா கர்ப்பமாகியுள்ளார்.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள சவுந்தரை அவர் வற்புறுத்திய நிலையில் நைசாக மாத்திரகளை கொடுத்து கர்ப்பத்தை சவுந்தர் கலைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மோகனபிரியா, தனது தந்தையிடம் எல்லாவற்றையும் கூற இருவரும் சவுந்தரிடம் நியாயம் கேட்டுள்ளனர்.

இதற்கு சவுந்தரும் அவர் நண்பர் சின்னதுரையும் அவர்களை மிரட்டியுள்ளனர். இதையடுத்து மோகனபிரியாவும், தந்தையும் பொலிஸ் புகார் கொடுத்த நிலையில் சவுந்தரையும், சின்னதுரையையும் பொலிசார் கைது செய்துள்ளனர்