வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவனை கொன்ற மனைவி : செய்த துரோகத்தின் அதிர்ச்சி பின்னணி!!

1186

இந்தியாவில் கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு, பெற்ற குழந்தையை தவிக்கவிட்டு சென்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கடந்த வாரம் மலைப்பாதையோரத்தில் நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் இறந்தவர் பெயர் முகமது சமீர் என்பதும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அவர் சவுதியில் வேலை செய்து வந்த நிலையில் சமீபத்தில் தான் சொந்த ஊருக்கு திரும்பியதும் தெரியவந்துள்ளது.

சமீரை அவர் மனைவி பர்தோஷ், தனது கள்ளக்காதலன் ஆசிப் என்பவனுடன் சேர்ந்து கொன்று வீசியதும் தெரியவந்துள்ளது.
முகம்மது சமீர் – பர்தோஷ் தம்பதியருக்கு மூன்று மாத குழந்தை உள்ள நிலையில், பர்தோஷுக்கு ஆசிப் என்ற கார் ஓட்டுநருடன் தவறான தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தங்களது காதலுக்கு கணவர் தடையாக இருப்பதாக எண்ணி அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த பர்தோஷ், கடந்த 14ஆம் திகதி சுற்றுலா செல்லலாம் எனக் கூறி முகம்மது சமீரை ஆசிப்பின் காரிலேயே கொடைக்கானல் அழைத்து வந்துள்ளார். கொடைக்கானலிலேயே வைத்து சமீரை கொலை செய்த இருவரும் டம்டம் பாறை அருகே சடலத்தை வீசிச் சென்றுள்ளனர்.

பின்னர் மங்களூர் வந்த பர்தோஷ், மூன்று மாத குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு 60 சவரன் நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக சமீரின் உறவினர் கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் பர்தோஷ் – ஆசிப் ஜோடியை தேடி வருகின்றனர்.