குருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்!!

2875

குருபெயர்ச்சி

அக்டோபர் 4 ஆம் திகதி ராஜ கிரகமாக கருதப்படும் குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். அதன் அடிப்படையில் இந்த குரு பெயர்ச்சியில் காதல் கைகூடும் ராசிகள் எவை என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த குருபெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு காதல் கைக்கூடும். ரிஷபம், கன்னி மற்றும் மீனம் இந்த 3 ராசியை சேர்ந்தவர்களுக்கு காதல் திருமணம் கைக்கூடும்.

ரிஷபம் : குருபெயர்ச்சியால் இந்த ரிஷப ராசியில் நல்ல பலன்களை அடையவிருக்கிறது. தொழில் மற்றும் பணவரவு அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் காதல் திருமணம் செய்துகொள்வதற்கு இந்த குருபெயர்ச்சி கைக்கூடும்.

கன்னி : குருபெயர்ச்சியால் இந்த கன்னி ராசிக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும். அருகில் உள்ள குருபரிகார தலங்களுக்கு சென்று குரு பகவானை வணங்கி வர சுப காரியங்கள் அரங்கேறும்.

மீனம் : குருபெயர்ச்சியின் போது குருபகவான் சென்று அமரும் ராசி மிதுனம். தற்போது மிதுனத்தில் 5 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைய உள்ளார்.

சந்திரன் நிற்கும் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய ஸ்தானங்களில் குரு பகவான் அமரும் காலம் முதலே நல்ல பலன்களை அளிக்கிறார். 2018 குரு பெயர்ச்சியானது துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறது.

இதில், மீனம் ராசிக்கு குரு பகவானின் பார்வை விழும் 2-ஆம் இடம் தனம், குடும்ப வாக்கு இடமாகும். 10 ஆம் இடம் தொழிலையும், 12ஆம் இடம் விரைய ஸ்தானமாகும்.

இதனால், சுப நிகழ்ச்சிகள் தாமதமின்றி நடைபெறும். மீனம் ராசியினருக்கு காதல் திருமணம் எவ்வித தடையும் இன்றி நிறைவேறும்.