வைரமுத்து விவகாரம் : சின்மயி யாருடன் தங்கினார்? வெளியான தகவல்!!

945

வைரமுத்து விவகாரம்

பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார். அக்டோபர் 9ஆம் தேதியன்று அவர் வெளியிட்ட பதிவில், இந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைத் தமிழர்களுக்காக ‘வீழமாட்டோம்’ என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும் இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்சர்லாந்தின் சூரிக் அல்லது பெர்ன் நகரில் நடந்ததாக கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியுள்ளார்.

விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் எனக் கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது ஹொட்டல் அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சுரேஷ் என்பவர் அளித்துள்ள பேட்டியில் சின்மயிக்கு எதிராக பேசியுள்ளார். தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதை சின்மயி நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பாளி மீது குற்றம்சாட்டும் சின்மயி மீது உலகத் தமிழர்கள் கோபத்தில் உள்ளனர்.

சின்மயி, அவரது தாயார் என்னுடைய இல்லத்தில்தான் தங்கினார்கள் என அவர் கூறியுள்ளார்.