இந்தியாவில் முதன்முறையாக மண்டை ஓட்டு அறுவைசிகிச்சை : மருத்துவர்கள் சாதனை!!

836

மருத்துவர்கள் சாதனை

இந்தியாவிலேயே முதல் முறையாக மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. புனேவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நான்கு வயது சிறுமிக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த சிறுமிக்கு கார் விபத்தில் அடிபட்டு இரண்டு பெரிய ஆபரேஷன்கள் செய்து இவர் உயிர் பிழைக்க வைக்கப்பட்டார்.

அதன்பின் மண்டை ஓட்டில் ஏற்பட்ட சின்ன விரிசல் பெரிதாகி உள்ளது என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் அதை மாற்ற வேண்டும் என்று மறுபடியும் அச்சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இவருக்கு மண்டை ஓட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்படி இவர் மண்டை ஓட்டில் ஐந்தில் மூன்று பங்கை மாற்றி இருக்கிறார்கள்.

இதற்கு அமெரிக்காவில் செய்யப்பட்ட செயற்கையாக மண்டை ஓடு பயன்படுத்தட்டுள்ளது. இதை அந்த சிறுமியின் மண்டை ஓட்டை எடுத்துவிட்டு பொருத்தி இருக்கிறார்கள். இப்போது அந்த சிறுமி நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுவே இந்தியாவிலேயே முதல் முறையாக மண்டை ஓட்டு அறுவை சிகிச்சை என்று மருந்துவர்கள் கூறுகின்றார்கள்.