மகளை திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்திய தந்தை : தாய் எடுத்த விபரீத முடிவு!!

924

தாய் எடுத்த விபரீத முடிவு

வேலூர் மாவட்டத்தில் மகளை திருமணம் செய்து வைக்கும்படி இரண்டாவது கணவர் வற்புறுத்தியதால் விரக்தியில் தாய் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை பஜனை தெருவை சேர்ந்த கல்பனா (வயது 36), காவேரிப்பாக்கம் பெரியகிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

இந்த தம்பதியினருக்கு 18 வயதில் மஞ்சு மற்றும் 10 வயதில் சுப்புலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் கல்பனாவிற்கு, அதேபகுதியில் காவல்துறையில் பணியாற்றி வரும் குமரேசன் என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தன்னைவிட சிறிய வயது பையனாக இருந்தாலும் குமரேசனை திருமணம் செய்துகொண்டு கல்பனா தன்னுடைய வாழ்க்கையினை நடத்தி வந்துள்ளார். சென்னையில் இருந்து அடிக்கடி கல்பனாவின் வீட்டிற்கு சென்று வந்த குமரேஷ், 18 வயதான மஞ்சு மீது ஆசைப்பட்டுள்ளார்.

உடனே அவரை திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு கல்பனா மறுப்பு தெரிவித்து, இனிமேல் வீட்டிற்கு வர வேண்டாம் என குமரேஷிடம் கூறியுள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் சண்டை நடந்து வந்துள்ளது.

இந்தநிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மஞ்சு, திறந்த நிலையில் வீடு இருப்பதை பார்த்து வேகமாக உள்ளே சென்று பார்த்துள்ளார். கல்பனா தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுத மஞ்சு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ள மஞ்சு தன்னுடைய தாய் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த புகார் மனு மீது பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது