உறவினர் கொடுத்த தொல்லை.. வாந்தி எடுத்து கதறினேன் : பிரபல தமிழ்ப் பாடகியின் பதிவு!!

868

பிரபல தமிழ்ப் பாடகி

பிரபல தமிழ் திரைப்பட பாடகி சுனிதா சாரதி இளம் வயதில் தான் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து தற்போது பகிர்ந்துள்ளார்.
#Metoo என்ற டேக்கில் பெண்கள் பலர் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என சின்மயி கூறினார். இதே போல பலர் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தைரியமாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாடகி சுனிதா சாரதி தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும் போது என் அம்மாவின் உறவினர் வீட்டுக்கு வருவார். அவர் என்னை தவறான முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இது சில மாதங்களுக்கு நடந்தது. அந்த நபருக்கும் ஒரு மகள் உள்ளார். இதிலிருந்தே நான் உறவினர்களை அதிகம் சந்திப்பதில்லை.

நான் திமிருபிடித்தவள் என அவர்கள் நினைப்பார்கள், அது கவலையில்லை. எனக்கு தொல்லை கொடுத்த நபரை என்றும் மன்னிக்க மாட்டேன். அதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் என் தாயின் நண்பர் என்னை அழகாக இருப்பதாக கூறுவார். என்னை அவர் மடியில் அமரவைத்து கொண்டு முத்தம் கொடுக்க முயல்வார், அதை நான் வெறுத்தேன்.

ஒருநாள் எனக்கு அவர் முத்தம் கொடுத்தார், நான் உடனே கழிவறைக்கு சென்று அங்கிருந்த Dettol-ஐ குடித்துவிட்டேன். பின்னர் வாந்தி எடுத்துவிட்டு கதறி அழுதேன். இதன் பின்னர் சில ஆண்டுகள் அவரை சந்திக்க வேண்டியிருந்தது. கடந்தாண்டு அவர் இறந்துவிட்டார் என செய்தி வந்தது.

நான் வெறும் இரண்டு சம்பவங்களை தான் கூறியுள்ளேன். என் போல் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக உண்மையை கூறுங்கள்.

சின்மயிக்கும் எனக்கும் மனக்கசப்பு இருக்கலாம், முன்பு போல நாங்கள் நெருங்கிய நண்பர்கள் இல்லை. ஆனால், அவருக்கு நடந்த விடயத்தை கேட்டவுடன் நொறுங்கி போய்விட்டேன்.
ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் ஆதரவாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.