சீரழிந்த எனது அம்மாவின் வாழ்க்கை : சின்மயி வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

1498

சீரழிந்த எனது அம்மாவின் வாழ்க்கை

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் வித்வான் ஒருவரால் தனது தாயாரின் சங்கீத வாழ்க்கை சீரழிந்ததாக பாடகி சின்மயி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திரைத்துறை போன்றே கர்னாடக சங்கீத உலகிலும் பாலியல் தொல்லைகள் உள்ளதாக கூறியுள்ளார்.

அதனால் பல பெண்கள், இசை பயிற்சியையும், பாரத நாட்டியத்தையும், மிருதங்கத்தையும் விட்டு விலகி விட்டதாக சின்மயி கூறி உள்ளார். மேலும் இது போன்ற சம்பவம் தங்கள் வாழ்க்கையிலும் நடந்துள்ளதாக கூறும் சின்மயி, தனது அம்மாவின் சங்கீத வாழ்க்கை சீரழிய காரணமாக அமைந்ததுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னுடைய அம்மா ஒரு ஆவணப்படத்தை எடுத்தார். அனால் அதை என் அம்மா அவர் எடுத்ததாக வெளியில் சொல்ல கூடாது என அதிகாரத்தில் இருந்த வித்வான் மிரட்டினார்.

இதற்கு என் அம்மா ஒப்புக்கொண்டதால் அவரின் சங்கீத வாழ்க்கை பாழானது. மட்டுமின்றி தன்னுடைய அப்பாவிடம் இருந்து அம்மா விவாகரத்து பெற்ற பின் தங்களின் குடும்ப செலவிற்காக 500 ரூபாய் மட்டுமே அளித்ததாகவும்,

அதனை வைத்து பல்வேறு சிரமங்களுக்கு நடுவே வாழ்ந்ததாகவும் சின்மயி குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பள்ளி கட்டணத்தை கூட கட்ட முடியாமல், 10 ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு வேலை செய்துகொண்டே தொலைதூர கல்வியின் மூலம் படித்ததாகவும் சின்மயி தெரிவித்துள்ளார்.