காரில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது இந்த இயக்குனர் தான் : தைரியமாக பெயரை சொன்ன பெண் இயக்குனர்!!

677

பாலியல் தொல்லை

கவிஞரும், இயக்குனருமான லீலா மணி மேகலை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது இவர் தான் என்று கூறி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் பாலில் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட போது, லீலா மணிமேகலை 2005-ஆம் ஆண்டு தனக்கு நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, ஒரு இயக்குனர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தியதாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அப்போது அந்த இயக்குனர் யார் என்பது குறித்து அவர் எதுவும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் இவர் தற்போது அவர் யார் என்று கூறியுள்ளார். அவர் திருட்டுபயலே, கந்தசாமி, 5 ஸ்டார் போன்ற படங்களை இயக்கிய சுசி கணேசன் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் தனக்கு நடந்த மற்ற அனுபவங்களை பற்றி வெளியில் சொல்வதற்கு தைரியத்தை வளர்த்து கொண்டிருக்கிறேன். அதை இந்த பழைய பதிவில் இருந்து துவங்குகிறேன். என்னை காரில் அடைத்து கொடுமை செய்தது சுசி கணேசன் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.