MeToo விவகாரம் : சின்மயி கணவர் சொன்னது என்ன?

643

சின்மயி கணவர்

பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து மீ டூ #MeToo என்ற ஹேஷ்டேகின் கீழ் பதிவிட்டு வருகின்றனர். இந்திய அளவில் பிரபலமாகி வரும் நிலையில், பிரபல பாடகி சின்மயி குற்றச்சாட்டுகளை கூறிவந்தார்.

இந்நிலையில் அவர் கணவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கிறது, விரைவில் அனைவருக்கும் சமமானதாக மாறும், அதுவரையிலும் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

அன்பான, தன்னலமற்ற பெண் ஒருவரையே நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன், என்னையும், நாய்க்குட்டிகளையும் பற்றியே கவலைப்படும் நபர் அவள். மனதளவில் ரொமான்டிக் ஆனவர் என தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி பேசுவதற்கு தைரியம் கொண்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.