பிக்பாஸ் வீட்டில் தமிழ் பெண் ரித்து திருட வில்லை : திருடியது யார் தெரியுமா?

370

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் தமிழ் பெண் ரித்து ஆச்சி மசாலா டாஸ்க்கில் அப்பளம் திருடியாதாக அண்மையில் நகைச்சுவையாக கூறியுள்ளார். இந்த அப்பளம் விவகாரம் தொடர்பில் ஐஸ்வர்யா தத்தாவும் நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் அப்பளம் கொடுக்கமாட்டார்கள் என்பதால் நானும், எனது தோழி யாசிகாவும் சேர்ந்து தான் அப்படி செய்தோம் என்று குறிப்பிட்டுள்ளார். யாசிகாவையும், என்னையும் தவிர வேறு யாரு இந்த குறும்பு வேலைகளை பிக்பாஸ் வீட்டில் பார்ப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அது மட்டும் இன்றி, பிக்பாஸ் நிகழ்ச்சி அவர் எதிர்ப்பார்த்த மாதிரி இல்லை என்றும், இது ஒரு புதிய அனுபவம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களின் ஆதரவு அதிகம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.