சின்மயிக்கு மார்க்கெட் இறங்கிவிட்டது… அத்தனையும் நடிப்பு : நடிகர் பயில்வான் ரங்கநாதன்!!

862

பயில்வான் ரங்கநாதன்

சினிமாவில் வந்துவிட்டால் பணமும், புகழும் ஒருங்கே கிடைக்கும் என பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இங்கு, கொடுக்கல் வாங்கல் நடக்கிறது. ஒரு நடிகை சினிமாவில் வரவேண்டுமென்றால் பல தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது. சின்மயிக்கு தற்போது பாடல் வாய்ப்பு இல்லை. அவரது மார்க்கெட் இறங்கிவிட்டது. அதனால்தான் அவ்வாறு இப்படி செய்கிறார். அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரிய விடயமாக நான் பார்க்கவில்லை.

வெளிநாட்டிற்கு போனேன் என்கிறார், அங்கு அது நடந்தது என்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு நடிப்பு என்று தோன்றுகிறது.

நான் சினிமாக்காரன் என்பதால் இதுகுறித்து தொடர்ந்து பேசவிரும்பவில்லை. சினிமாவில் பாலியல் தொந்தரவு என்பது பொதுவாக நடக்கும் ஒன்று. ஆனால், பல நடிகைகள் இதனை வெளியில் சொல்லமாட்டார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.