மூடிட்டு போ.. டுவிட்டரில் கொந்தளித்த சின்மயி!!

1352

கொந்தளித்த சின்மயி

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கூறி பரபரப்பை கிளப்பினார் பாடகி சின்மயி. இவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் எழுந்துள்ளன, குறிப்பாக 13 வருடத்துக்கு முன்பு நடந்ததை இப்போது ஏன் கூறவேண்டும் என பிரபலங்கள் பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் டுவிட்டரில் ஒருவர், “தீபாவளிக்கு சின்மயி வெடி என்று ஒன்று வந்துள்ளதாம். இப்போது பற்ற வைத்தால் பதினைந்து வருடத்துக்கு அப்புறம்தான் வெடிக்குமாம்” என்று கேலி செய்து ஒரு பதிவை வெளியிட்டார்.

இதற்கு பதிலடியாக, “எரிமலை பல வருஷம் கொந்தளிச்சிட்டே இருக்குமாம். ஆனால் வெடிச்சா சர்வ நாசம். மூடிட்டு போ” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சின்மயிக்கு மார்க்கெட் இறங்கிவிட்டது… அத்தனையும் நடிப்பு : சினிமாவில் வந்துவிட்டால் பணமும், புகழும் ஒருங்கே கிடைக்கும் என பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இங்கு, கொடுக்கல் வாங்கல் நடக்கிறது. ஒரு நடிகை சினிமாவில் வரவேண்டுமென்றால் பல தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது. சின்மயிக்கு தற்போது பாடல் வாய்ப்பு இல்லை. அவரது மார்க்கெட் இறங்கிவிட்டது. அதனால்தான் அவ்வாறு இப்படி செய்கிறார்.

அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரிய விடயமாக நான் பார்க்கவில்லை. வெளிநாட்டிற்கு போனேன் என்கிறார், அங்கு அது நடந்தது என்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு நடிப்பு என்று தோன்றுகிறது.

நான் சினிமாக்காரன் என்பதால் இதுகுறித்து தொடர்ந்து பேசவிரும்பவில்லை. சினிமாவில் பாலியல் தொந்தரவு என்பது பொதுவாக நடக்கும் ஒன்று. ஆனால், பல நடிகைகள் இதனை வெளியில் சொல்லமாட்டார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

சின்மயிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது : பிரபல நடிகை : பெண்களுக்கு தங்களுக்கு நேர்ந்த பாலில் வன்கொடுமைகள் குறித்து அந்த நிமிடத்திலேயே குரல் கொடுக்க வேண்டும் என நடிகை சோனியா கூறியுள்ளார்.

காலம் கடந்து செல்வது என்பது தேவையற்ற ஒன்று. அந்த வகையில், சின்மயி கூறிய பாலியல் புகாருக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். ஒவ்வொரு பெண்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பாலியல் தொந்தரவுகளை கடந்துதான் வந்திருக்கிறார்கள்.

10 வருடங்களாக தனது மனதுக்குள் பூட்டி வைத்திருந்த வைரமுத்து மீதான குற்றச்சாட்டை தற்போது கூறியிருக்கிறார் சின்மயி. ஆனால், கடந்த சில வருடங்களாக அவரது பாடலில் பாடியுள்ளார், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.

சமீபத்தில் கூட ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். உங்களுக்கு அறவே பிடிக்காத ஒரு நபர், உங்களை இழிவான நினைத்த நபர் என்றால், எதற்காக அவருடன் பயணிக்கிறீர்கள், சற்று தள்ளியிருக்கலாம்.

மீடூவுக்காக ஒரு குழுவை அமைக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளோம். ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதுகுறித்து விசாரிப்போம் என நடிகை சோனியா கூறியுள்ளார். இப்படி, காலம் தாழ்த்தி குரல் கொடுக்கும் பின்னல்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என கூறியுள்ளார்.