பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் அர்ஜுன் : என் தந்தை இப்படிப்பட்டவர் தான் என மகள் ஐஸ்வர்யா பேட்டி!!

1210

நடிகர் அர்ஜுன்

பாலியல் புகாரில் நடிகர் அர்ஜுன் சிக்கியுள்ள நிலையில் அது குறித்து அவரின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் #MeToo என்னும் ஹேஷ்டாக்கின் கீழ் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் தங்கள் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மூத்த நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அதில், 2016-ம் ஆண்டு `விஸ்மயா’ என்ற படத்தில் அர்ஜூனின் மனைவியாக நான் நடித்தேன்.

அப்போது நெருக்கமான காதல் காட்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கான ஒத்திகையின்போது என் அனுமதி இல்லாமலேயே அர்ஜூன் என்னைக் கட்டித் தழுவினார். அத்துமீறி நடந்து கொண்டார்.

படப்பிடிப்புக்குப் பிறகு வெளியே சந்திக்க அழைத்தார். நான் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், எதன் அடிப்படையில் என் தந்தை மீது ஸ்ருதி #MeToo புகார் கூறுகிறார். படப்பிடிப்பின் போது அத்தனை பேர் முன்னிலையில் என் தந்தை எப்படி அத்துமீறியிருக்க முடியும். அப்படி என் தந்தை தவறு செய்திருந்தால் படப்பிடிப்பின் போதே சொல்லியிருக்கலாமே.

என் தந்தை அவுட்டிங் அழைத்ததாக வேறு ஸ்ருதி சொல்கிறார். அதற்கெல்லாம் என் தந்தைக்கு ஏது நேரம். அவர் பப்புக்கோ வேறு சொகுசு விடுதிகளுக்கோ போவதே கிடையாது. என் தந்தை இப்படிப்பட்டவர் தான்.

ஸ்ருதி முன்வைத்துள்ள அர்த்தமற்ற புகாரால் என் தந்தை அவரை நினைத்து வருத்தப்படவில்லை. எங்களை நினைத்தும் எங்கள் மனநிலையை நினைத்தும்தான் வருந்துகிறார். பாலியல் துன்புறுத்தல் என்பது மிகவும் வலுவான வார்த்தை. ஸ்ருதி அதைப் பயன்படுத்துவதற்கு முன் யோசித்திருக்க வேண்டும்.

#MeToo என்னும் இயக்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால் ஸ்ருதி போன்றவர்கள் விளம்பரத்துக்காக செய்வதை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.