தினமும் 2 நிமிடம் வெங்காயத்தை கைகளில் இப்படி தேயுங்கள் : அற்புதம் இதோ!!

1044

தினமும் 2 நிமிடம்

வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால் இது பல்வேறு பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது. அந்த வெங்காயத்தை தினமும் காலையில் இரண்டாக வெட்டி அதை சிறிது நேரம் தேய்து வந்தால் பல பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

வெங்காயத்தை கைகளில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தீக்காயம் பட்ட இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தால் வலி குறைவதுடன் தொற்றுகள் ஏதும் அண்டாமல் பாதுகாக்கிறது.
முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வெங்காய சாற்றுடன் சிறிது மஞ்சள் தூளை கலந்து மசாஜ் செய்ய வேண்டும், இப்படி செய்தால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

கைகளில் வியர்வை அதிகரிப்பதால் ஏற்படுவதை தடுக்க வெங்காயத்தை தினமும் தேய்ப்பது மிகவும் நல்லது. பல்வலி உள்ள இடத்தில் சிறு துண்டு வெங்காயத்தை வைத்தால் வலி குறையும். மேலும் சிறு பூச்சிகள் கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்தால் எரிச்சல் இருக்காது.

வெங்காயத்தில் உள்ள ஃபாரிக் ஆசிட் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு, உடலின் தலை முதல் கால் வரை ரத்தோட்டத்தை சீராக்க உதவுகிறது. மேலும் தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் வெங்காயத்தை தினமும் சிறிது நேரம் தேய்த்து வத்தால் முடி நன்கு வளரும்.

மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன் பச்சையாக வெங்காயத்தை உட்கொண்டால் மாதவிடாய் வலி குறையும். வெட்டிய வெங்காயத்தை படுக்கை அறையில் வைப்பதால் அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவை தன்னுள் ஈர்த்து வைத்துக் கொள்ளும்.

காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது பாதத்தில் வெங்காயத்தை வைத்தால் காய்ச்சல் குணமாகும். சூடான நீரில் நறுக்கிய வெங்காயத் துண்டுகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும், இரவு படுக்கும் முன் இந்த நீரை அருந்தினால் தொண்டை வலி குணமாகும்.