தமிழ் புத்தாண்டுப் பலன்கள் 2018 – கன்னி

1772

மனதில் பட்டத்தை பளிச்சென்று பேசி உண்மைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நீங்கள், சில சமயங்களில் பலருக்கு எதிரியாகவே தெரிவீர்கள். எல்லோரையும் எடுத்த எடுப்பிலேயே நம்பும் நீங்கள், காலம் கடந்து`தான் சிலரின் கல் மனதை புரிந்து கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த 2018ம் ஆண்டு பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் சுகசப்தமாதிபதியான குருபகவான் 2ம் வீட்டில் நிற்பதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அனுபவப் பூர்வமான முடிவுகளால் எல்லோரையும் கவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.

ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் சென்று மறைவதால் எந்த வேலையையும் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள்.

வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல் வரும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய தனித்தன்மையை பின்பற்றுவது நல்லது. இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டிலேயே சனி அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால் உங்களின் அடிப்படை நடத்தை கோலங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். தாயாருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனக்கசப்பு வந்து நீங்கும்.

01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனுடன், சனி சேர்ந்திருப்பதால் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது. 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன் சனி சேர்வதால் தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும்.

வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தி விடுங்கள். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்வதால் மன இறுக்கம் வந்து நீங்கும்.

மகனின் படிப்பு, உத்யோகத்துக்காக சிலரது சிபாரிசை நாடுவீர்கள். கார்ப்பிணிகள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்க வேண்டாம். படிகளில் ஏறும்போது கவனம் தேவை. 8.2.2018 முதல் 2.3.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் சுக்கிரன் 6ல் மறைவதனால் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினால் அதை எல்லோரும் தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

டி.வி., ஃப்ரிட்ஜ் பழுதாகும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். அலைப் பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். இந்தப் புத்தாண்டு முழுக்கவே ராகுபகவான் லாப வீட்டிற்குள்ளேயே அமர்ந்திருப்பதால் முன்பு சவாலாக தெரிந்த சில விஷயங்கள் இப்போது சாதாரணமாக முடிவடையும். கேது 5ல் தொடர்வதால் குழப்பம் அதிகரிக்கும். சில நேரங்களில் மனஇறுக்கம் உண்டாகும்.

வியாபாரிகளே! போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் சின்ன சின்ன நட்டங்கள் இருக்கும். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே, நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.

உணவு, மருந்து, கட்டுமானப் பொருட்கள், நெல் மண்டி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வெடிக்கும். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். வேலையாட்களும் உங்களுடைய கஷ்ட, நஷ்டங்களைப் புரிந்து கொள்ளாமல் பொறுப்பற்று நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்யோகஸ்தர்களே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார். புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்களால் சின்ன சின்ன நெருக்கடிகளை சமாளிக்க வேண்டி வரும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது
ஆதங்கப்படுவீர்கள்.

கன்னிப்பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வேலையும் அமையும். இந்தாண்டு முழுக்க சனியின் போக்கு சாதகமாக இல்லாததால் காதலில் ஏமாற்றமும், உயர்கல்வியில் தேக்கமும், மந்தமும் ஏற்படும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். பெற்றோருடன் மோதிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். தோலில் நமைச்சல், தேமல், மாதவிடாய் கோளாறு வந்து நீங்கும்.

மாணவ-மாணவிகளே! விளையாட்டுத்தனத்தை குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றி பெற கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி வரும். கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். மதிப்பெண் உயரும். விரும்பிய கோர்ஸில் சேர கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரும்.

அரசியல்வாதிகளே! மேலிடத்தைப் பற்றி சகாக்களிடம் குறை கூறிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் உங்களைப் பற்றி வீண் வதந்திகளை பரப்பிவிடக்கூடும். கட்சிக் கூட்டங்களுக்கு தவறாமல் கலந்து கொள்ளப்பாருங்கள்.

கலைத்துறையினரே! வீண் வதந்திகள் விலகும். கனவுகள் நனவாகும். உங்களின் படைப்புகள் பாராட்டப்படும். மூத்த கலைஞர்களை விமர்சனம் செய்ய வேண்டாம்.

விவசாயிகளே! பயிர்களை நவீனரக உரமிட்டு பாதுகாப்பீர்கள். எண்ணெய் வித்துகள், துவரை, உளுந்து, பயறு வகைகளால் ஆதாயமடைவீர்கள். நிலத்தகராறு பிரச்னைகள் வரும். ஆகமொத்தம் இந்த புத்தாண்டு கட்டுக்கடங்காத செலவுகளையும், கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளினாலும், தன்னம்பிக்கையால் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்:சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.