வைரமுத்து மட்டும் என்னிடம் தவறாக நடக்கவில்லை, இவர்களும்தான் : பாடகி அதிர்ச்சிப் பேட்டி!!

1051

பாடகி புவனா ஷேஷன்

தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக மீடு விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. இதில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி புகார் அளித்தார். இதனையடுத்து பலர் இவர் மீது புகார் அளிக்க தொடங்கினார்.

அப்படி பாடகி புவனா ஷேஷன் என்பவரும் தன்னை வைரமுத்து தவறாக அழைத்தார் என்று கூறியிருந்தார். அவர் தற்போது மீண்டும் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம்சாட்டும் மனப்பான்மையும் அதிகரிக்கிறது. எனக்கு நடந்த தவறை சொல்ல என் மகன் எனக்கு அளித்த நம்பிக்கைக்கு பிறகு தான் வெளியில் சொல்ல தைரியம் வந்தது என்று கூறினார்.

வைரமுத்து மட்டுமே இவ்வாறு நடந்துகொண்டதாக கூறவில்லை. இன்னும் சிலரும் இப்படித்தான் பெண்களை படுக்கைக்கு அழைக்கத்தான் செய்கின்றனர். இப்படிக்கேட்ட 90 சதவீதம் பேர் மறுத்ததும் அமைதியாக சென்றுவிடுவார்கள்.

ஆனால் வைரமுத்து மீது மட்டும் நான் குற்றம்சொல்ல காரணம் அவர் மட்டும்தான் நான் நிராகரித்ததற்காக எனக்கு வந்த அத்தனை பாடகி வாய்ப்பையும் தொடர்ந்து பலவழிகளில் தடுத்தார். பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இதை வெளியில் சொல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.