விஜய் படத்தை முதல் காட்சியாக பார்த்த மாணவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம் : கதறிய பெற்றோர்!!

473

கோர சம்பவம்

தீபாவளி அன்று விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரும்பிய இரண்டு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான தினேஷ்குமார் மற்றும் சித்திக் ஆகிய இருவரும் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இருவரும் விஜய் ரசிகர்கள். அதனால் தீபாவளி அன்று முதல் காட்சியிலேயே விஜய் நடித்த சர்கார் படம் பார்க்க சென்றுள்ளார்கள்.

அதன்படி காலை 6 மணி காட்சி பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் இருவரும் சென்றார்கள். படம் பார்த்துவிட்டு 9.45 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந்தபோது, எதிரே வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில் படுகாயம் அடைந்த தினேஷ்குமாரும், சித்திக்கும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இளம் மகன்கள் இறந்துபோனது குறித்து பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.