5 வயது சிறுமிக்கு 11 வயது சிறுவனால் நேர்ந்த கொடுமை!!

836

நேர்ந்த கொடுமை

உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுவன் தனது பள்ளியில் படித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ghaziabad மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 11 வயது மாணவன் குறித்த சிறுமியை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளான்.

அங்கு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். சிறுமியின் அழுகுரல் கேட்டு அருகில் இருப்பவர்கள் அங்கு சென்றுபார்த்தபோது, ரத்தவெள்ளத்தில் சிறுமி கிடந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை பொலிசில் புகார் அளித்ததையடுத்து, சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.