எனக்கு மாதவிடாய் அண்ணா… என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன் : பதறவைக்கும் மாணவியின் வாக்குமூலம்!!

1803

மாணவியின் வாக்குமூலம்

தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை- மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 5 ஆம் திகதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுக்குள் சென்ற இவரை, அதே ஊரை சேர்ந்த ரமேஷ் – சதீஷ் ஆகிய இரண்டு பேரும் வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தன்னைக் காத்துக் கொள்ள சவுமியா நடத்திய போராட்டத்தில் ஆத்திரமடைந்த அயோக்கியர்கள் சவுமியாவை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

மாலையில் மகளை அழைத்துக்கொண்டு கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். காவலர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் புகாரை பெற மறுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகே இரவு 12 மணிக்கு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் இரண்டு தினங்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இரண்டு தினங்கள் கழித்து மிகக் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சவுமியாவை தரும்புரி மருத்துவமனைக்கு காவலர்கள் துணையின்றி அனுப்பியுள்ளனர். சாதாரண பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சவுமியா உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சவுமியா பொலிசில் அளித்துள்ள வாக்குமூலம் பதறவைக்கிறது.

ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் அண்ணன் முறையாவார்கள். அவர்கள் இருவரும் என்னை காட்டுக்கு வைத்து மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர், ஒருவர் என்னை பிடித்துக்கொள்ள மற்றொருவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.

அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என கதறினேன், எனக்கு மாதவிடாய் காலம், என்னை விட்டுவிடுங்கள் என அவர்களிடம் கதறியும் கேட்கவில்லை என அவர் அளித்துள்ள வாக்குமூலம் பதறவைத்துள்ளது.