கண்ணை மறைத்த கள்ளக்காதலியின் மோகம் : மனைவியை கொன்ற கணவன் : திடுக்கிடும் சம்பவம்!!

1325

திடுக்கிடும் சம்பவம்

ஹரியானாவில் மனைவியை கொன்ற கணவனுக்கு அவரது கள்ளக்காதலி மூளையாக இருந்தது தெரியவந்துள்ளது. ஹரியானாவின் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் தீபிகா, வங்கியில் பணிபுரிகிறார். தன்னுடைய கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த மாதம் 27ம் திகதி தன்னுடைய குடியிருப்பின் 8வது மாடியிலிருந்து விழுந்து பலியானார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் தீபிகாவின் கணவர் விக்ரம் சிங்கை கைது செய்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து தீபிகாவுக்கு தெரியவர அவர் சண்டையிட்டதும், சம்பவதினத்தன்று கோபத்தில் விக்ரம், தீபிகாவை தள்ளிவிட்டதும் தெரியவந்தது.

மேலும் விசாரணை அதிகாரி கூறுகையில், மனைவியை கொல்வதற்கு விக்ரமின் கள்ளக்காதலியே தூண்டுதலாக இருந்துள்ளார். இருவரின் செல்போன் பேச்சுகளை ஆராய்ந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன, மனைவி கொலை செய்யும் எண்ணத்துடனே விக்ரம் வாழ்ந்து வந்துள்ளார்.

அவரது காதலியும், மனைவியை விவாகரத்து செய்துவிடு, அல்லது கொன்று விடு என அடிக்கடி கூறிவந்துள்ளார். இதற்கிடையே தீபிகா கொல்லப்படுவதற்கு முன்பு, 10 நாட்கள் நைனிதாலுக்கு விக்ரம் சுற்றுலா அழைத்து சென்று கொல்ல முயன்றுள்ளார்.

அத்திட்டம் நிறைவேறாமல் போக ஆத்திரத்தில் இருந்துள்ளார், இந்நிலையில் சம்பவதினத்தன்று தீபிகா- விக்ரமுக்கு சண்டை முற்றியுள்ளது. அந்நேரத்தில் காதலிக்கு போன் செய்து விக்ரம் பேச, பால்கனியில் இருந்து அவளை தள்ளவிடு என ஐடியா கொடுத்துள்ளார். இதன்படியே விக்ரம் கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கள்ளக்காதலியை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.